நிகழ்வு-செய்தி

கொமாண்டர் கங்கநாத் ஜயகொடி இலங்கை கடற்ப்படை கப்பல் மிஹிகதவின் கட்டளை அதிகாரியாக பொருப்பேற்கிறார்

இலங்கை கடற்படையின் விரைவான கடற்படைக் கப்பலான இலங்கை கடற்படையின் மிஹிகத கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக இன்று டிசம்பர் 24 கொமாண்டர் கங்கநாத் ஜயகொடி பொறுப்பேற்றார்.

24 Dec 2019

உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்!

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று (டசெம்பர் 25) கிறிஸ்துமஸ் தினத்தை மிக உயர்ந்த இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் கொண்டாடுகிறார்கள்.

24 Dec 2019

கேரள கஞ்சாவுடன் மூன்று (03) நபர்கள் கைது

புத்தலத்தின் மொல்லிபுரம் கடற்கரை பகுதியில் கேரள கஞ்சா 80.25 கிலோ கிராம் உடன் 03 நபர்கள் 2019 டிசம்பர் 23 அன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

24 Dec 2019

வட மத்திய மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடற்படை மேலும் உதவி வழங்குகிறது

வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மற்றும் பொலன்னருவை மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க கடற்படை முயற்சித்து வருவதுடன் மொபைல் மறுசுழற்சி இயந்திரங்கள் மூலம் சுத்தமான தண்ணீரை விநியோகிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

24 Dec 2019

375 எண்ணிக்கையிலான மதனமோதக மருந்துகளுடன் ஒருவர் கடற்படையினால் கைது

2019 டிசம்பர் 23 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள சீனா பே பகுதியில் பொலீஸ் அதிரடிப்படையுடன் இணைந்து கடற்படை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 375 எண்ணிக்கையிலான மதனமோதக மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

24 Dec 2019

கடற்படையினரால் 46.2 கிலோ கிராம் பீடி இலைகளுடன் நபரொருவர் கைது

காவல்துறை சிறப்பு பணிக்குழுவுடன் ஒருங்கிணைந்து கடற்படை, டிசம்பர் 23 அன்று யாழ்ப்பாணத்தின் குருநகரில் வைத்து 46.2 கிலோ கிராம் பீடி இலைகளுடன் நபரொருவர்கடற்படை காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

24 Dec 2019