அங்கீகரிக்கப்படாத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்ட்ட 07 நபர்கள் கடற்படையினால் கைது

2019 டிசம்பர் 24 ஆம் திகதி திருகோணமலை நிலாவெலியில், அங்கீகரிக்கப்படாத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 07 நபர்களை கடற்படை கைது செய்தது.

நிலாவெலியில் பொதுப் பகுதியில் கடற்படை நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 07 நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலை, ஒரு டிங்கி மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் ஆகியவை திருகோணமலை மீன்வள உதவி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

ஆண்டு முழுவதும், அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பல நபர்களை கடற்படைகைதுசெய்துள்ளது. கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பின் பல்லுயிர் மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கான மீன் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்கும் முயற்சியில் கடற்படை இந்த வகையான சட்டவிரோத செயல்களில் தொடர்ந்து விழிப்புடன் இருக்கின்றது.