கெப்டன் நிமல் ரணசிங்க இலங்கை கடற்படை கப்பல் நந்திமித்ரவின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றார்

இன்று (டிசம்பர் 27) இலங்கை கடற்படையின் விரைவான கடற்படைக் கப்பல் "நந்திமித்ர" இன் புதிய கட்டளை அதிகாரியாக கெப்டன் (மாலிமா) நிமல் ரணசிங்க பொறுப்பேற்றார்.

கப்பலின் முன்னாள் தளபதி, கெப்டன் புத்திக லியனகமகே, திருகோணமலை கடற்படை நிலையத்தில் கட்டளை அதிகாரியின் கடமைகளை அதிகாரப்பூர்வமாக அவருக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ரியர் அட்மிரல் உபுல் டி சில்வாவும் கலந்து கொண்டார். புதிய தளபதியின் பிரிவுகளின் ஆய்வை முடித்த பின்னர் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.