சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியமீனவர்கள் 14 பேர் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியமீனவர்கள் 14 பேர் மற்றும் அவர்களின் 03 படகுகள் 2019 டிசம்பர் 28 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது

இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட நெடுந்தீவு பகுதியில் இலங்கை கடற்படை மேற்கொண்ட வழக்கமான ரோந்துப் பணியின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 03 இந்திய மீன்பிடி படகுகளுடன் பதினான்கு (14) இந்திய மினவர்கள் கைது செய்யப்பட்டனர். அங்கு மேற்கொண்டுள்ள மேலதிக விசாரணையில் இந்த இந்தியர்கள் 20 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இங்கு, கடற்படையால் கைது செய்யப்பட்ட படகுகள் இலங்கை கடற்படை கப்பல் எலார நிருவனத்துக்கும் மீனவர்கள் இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்துக்கும் கொண்டுவரப்பட்டது. இவர்களை மருத்துவ பரிசோதனையின் பின்னர், யாழ்ப்பாணம் உதவி மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

இலங்கை கடற்படை தொடர்ந்து நடத்திய ரோந்துப்பணியின் விளைவாக, இலங்கை பிராந்திய கடல் எல்லை மீறும் இந்திய மீன்பிடி இழுவைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும், கடற்படை தனது வளங்களை உள்ளூர் மீனவர்களின் பாதுகாப்பிற்காகவும், தீவின் பிராந்திய நீரில் மீன் இருப்புக்களைப் பாதுகாப்பதற்காகவும் தொடர்ந்து செயல்படுத்தும்.