ஹெராயினுடன் போதைப் பொருள் கடத்தல்காரரை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறை இணைந்து 2019 டிசம்பர் 31, அன்று யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் ஒரு போதைப்பொருள் வியாபாரியை கைது செய்தன.

இலங்கை கடற்படை நாட்டில் போதைப்பொருளை ஒழிப்பதற்காக அடிக்கடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, யாழ்ப்பாணப் பகுதியில் கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது யாழ்ப்பாணக் கோட்டை அருகே சந்தேகத்திற்கிடமான ஒருவர் காணப்பட்டார். அவரை சோதனை செய்த போது 35 கிராமுக்கு அதிகமான ஹெராயின் அவரிடம் கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேக நபர் மணிப்பாயில் வசிக்கும் 29 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இது குறித்து யாழ்ப்பாணம் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.