மணல் அகழ்வதற்கு தடைசெய்யப்பட்ட பகுதியில் மணல் ஏற்றும்போது இரண்டு (02) நபர்கள் கைது

கடற்படை மற்றும் காவல்துறையினர் நடத்திய சோதனையின்போது, 2019 டிசம்பர் 31 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை கடுவெவ ஆருவவில் மணல் அகழ்வதற்கு தடைசெய்யப்பட்ட பகுதியில் மணல் ஏற்றும்போது இரண்டு (02) நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படை காவல்துறையினருடன் இணைந்து அனுமதிக்கப்படாத இடங்களில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு நபர்கள் கைது செய்ய ஒரு கூட்டு நடவடிக்கை யொன்று ஹம்பாந்தோட்டை கடுவெவ ஆருவ பகுதியில் நடத்தியது.

ஹம்பாந்தோட்டை கடுவெவ ஆருவ பகுதி மணல் அகழ்வதற்கு அனுமதிக்கப்படாத பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், சந்தேக நபர்கள் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, 02 நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஒரு லாரி, ½ மணல் கியுப் மற்றும் ஒரு திணி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

சந்தேகநபர்கள் சூரியவெவ பகுதியில் வசிக்கும் 43 மற்றும் 48 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள், லாரி வண்டி, மணல் மற்றும் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹம்பாந்தோட்டைபொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.