மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் டெட்டனேட்டர்கள் கொண்ட ஒரு நபர் கடற்படையின் உதவியுடன் கைது

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2020 ஜனவரி 02 ஆம் திகதி மன்னார் பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நவடிக்கையின் போது மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் பல டெட்டனேட்டர்களைக் கண்டறிந்தது.

வெடிபொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் கடல் சுற்றுச்சூழல் அழிக்கப்படுவதைத் தடுக்க கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி கடற்படை மற்றும் போலீஸ் ஊழல் தடுப்புப் பிரிவு இனைந்து மன்னார் பகுதியில் மேற்கொண்டுள்ள ஒரு நடவடிக்கையின் போது சாலையில் பயணித்த சந்தேகத்திற்கிடமான நபரை கவனித்து அவரை ஆய்வு செய்தனர். அங்கு, அவரிடமிருந்து எட்டு சட்டவிரோத டெட்டனேட்டர்கள் மற்றும் ஒரு பாதுகாப்பு நூல் கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த டெட்டனேட்டர்கள் மற்றும் பாதுகாப்பு நூல் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக தயாராக இருந்த போது இவ்வாரு கண்டுபிடிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர் அப்பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் மற்றும் பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.