சேதவத்தையில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அனைப்பதற்க்கு கடற்படை உதவி

2019 ஜனவரி 3 ஆம் திகதி வெல்லம்பிட்டிய பகுதியில் உள்ள சேதவத்தையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அனைப்பதற்க்கு கடற்படை உதவியது.

அதன்படி, வெல்லம்பிட்டிய பகுதியில் உள்ள சேதவத்தையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டிடத்தில் வெடித்த இந்த தீ விபத்து குறித்து கடற்படைக்கு தகவல் கிடைத்தவுடன், கடற்படை வீரர்கள், தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் நீர் பவுசர்கள் அடங்கிய பெரிய குழு தீயணைப்பு பணிக்கு அனுப்பப்பட்டது.

கொழும்பு முனிசிபல் கவுன்சில்,ரானுப்படை,விமானப்படை மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் ஆகியோருடன் இணைந்து, கடற்படை தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதுமாக அணைக்க தங்கள் அதிகபட்ச ஆதரவை வழங்கினர்.

தேவைப்படும் மக்களுக்கு உதவ முன்வந்த கடற்படை எந்தவொரு சூழ்நிலையிலும் அவர்களுக்கு உதவ மேலும் தயாராக உள்ளது.