கேரள கஞ்சாவுடன் இரண்டு பேரை கைது செய்ய கடற்படை உதவி

காவல்துறையினரின் ஒருங்கிணைப்பில் கடற்படை 2020 ஜனவரி 03 ஆம் திகதி தோப்பூரின் கதிரவேலி பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவரை கைது செய்தது.

அதன்படி, போலீசாருடன் ஒருங்கிணைந்து கடற்படை தோப்பூரின் கதிரவேலி பகுதியில் சோதனை நடத்தி 300 கிராம் கேரலா கஞ்சா வைத்திருந்த இருவரை கைது செய்தது. சந்தேக நபர்கள் கஞ்சாவை விற்க முயன்றபோது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் 21 மற்றும் 31 வயதுடைய தோப்பூர் மற்றும் தங்கநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாலம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவுடன் தோப்பூர் போலீசாரிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டனர். போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும், இதுபோன்ற பொருட்களை வைத்திருப்பவர்களுக்கும் கடற்படை தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.