குடிபோதையில் சட்டவிரோதமாக கடற்படை முகாமுக்குள் நுழைய முயன்ற இருவர் கைது

2020 ஜனவரி 5 அன்று, முல்லைதீவு நயாரு பகுதியில் அமைந்துள்ள இலங்கை கடற்படை முகாமுக்குள் குடிபோதையில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இரண்டு நபர்களை கடற்படையால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

02 குடிகாரர்கள் கடற்படைத் தளத்தின் அருகே ஆக்ரோஷமாக நடந்துகொண்டு, கையில் கத்தியைக் கொண்டு, பின்னர் கடற்படைத் தளத்திற்குள் நுழைய முயன்றபோது இருவரையும் கடற்படை காவலில் எடுத்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர்கள் அப்பகுதியில் வசிக்கின்ற, 23 வயதுடையவர்கள் எனக் கூறப்படுகிறது. மேலும், அவர்கள் வந்திருந்த மோட்டார் சைக்கிளும் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் கத்தி முல்லைதீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.