சட்டவிரோதமாக பிடித்த கடல் அட்டைகளுடன் மூன்று (03) நபர்கள் கடற்படையால் கைது

2020 ஜனவரி 05 ஆம் திகதி யாழ்ப்பாணம், மண்டதீவுக்கு தெற்கு கடல் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின்போது சட்டவிரோதமாக பிடித்த கடல் அட்டைகளுடன் மூன்று (05) நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடல் மண்டலத்தில் கடல் மற்றும் மீன்வள வளங்களை பாதுகாக்க இலங்கை கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி, யாழ்ப்பாணம் மண்டதீவின் தெற்கு கடலில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான படகொன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன் அங்குரின்து 13 கிலோகிராம் கடல் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலதிக விசாரணையில் அவர்கள் அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடிக்கச் சென்றது தெரியவந்தது, மேலும் அவர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். ஒரு படகு, ஒரு மீன்பிடி வலை, 34 கிலோகிராம் மீன் மற்றும் 13 கிலோகிராம் கடல் அட்டைகள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர்கள் 22, 36 மற்றும் 47 வயதுடைய யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள் எனக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.