477 சங்குகளுடன் ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் மன்னார் மீன்வள உதவி இயக்குநரின் அலுவலகம் இனைந்து 2020 ஜனவரி 07 ஆம் திகதி தலைமன்னார் கரிசல்பாடு பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக 477 சங்குகள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படை மேற்கொண்ட மற்றொரு சோதனை நடவடிக்கை மன்னார் மீன்வள உதவி இயக்குநரின் அலுவலகமுடன் இனைந்து தலைமன்னார் கரிசல்பாடு பகுதியில் மேற்கொண்டுள்ள போது அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் ஒரு கடையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள இந்த சங்குகளுடன் ஒருவர் கைது செய்யபட்டார். கைது செய்யப்பட்ட நபர் மன்னார், பேசாலை பகுதியில் வசிக்கின்ற 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் மற்றும் சங்குகள் ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் மீன்வள உதவி இயக்குநரின் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.