தடைசெய்யப்பட்ட வலைகளைக் கொண்ட இரண்டு (02) நபர்களைக் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு 2020 ஜனவரி 7 ஆம் திகதி யாழ்ப்பாணம் பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சேதத்தைத் தடுக்க கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு மேற்கொண்ட நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம் அம்பிகாநகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து தடைசெய்யப்பட்ட இரண்டு மீன்பிடி வலைகளை கண்டுபிடிக்கப்பட்டதுடன் வீட்டில் இருந்த இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் யாழ்ப்பாணம் கண்ணபூரம் பகுதியில் வசிக்கின்ற 46 மற்றும் 50 வயதானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் வலைகள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் உதவி மீன்வள இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.