தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது

கடற்படை இன்று (2020 ஜனவரி 08,) மொல்லிகுளம் கடலில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட பல நபர்களை கைது செய்துள்ளனர்.

பல்வேறு தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, மொல்லிகுளம் பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் ரோந்து செல்லும் போது தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்திய 15 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு கடற்படையால் மூன்று டிங்கி படகுகள் மற்றும் மூன்று வலைகளையும் கைதுசெய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்கள் 22 முதல் 45 வயதுடைய அரிப்பு பகுதியில் வசிப்பவர்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக மீனவர்கள், படகுகள் மற்றும் வலைகள் மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.