ஹெராயின் கொண்ட ஒரு நபர் கைது செவய்ய கடற்படை உதவி

2020 ஜனவரி 7, ஆம் திகதி, திருகோணமலை கின்னியா பகுதியில் சுமார் 5 கிராம் ஹெராயின் கொண்ட ஒருவரை கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து கைது செய்தனர்.

திருகோணமலை கின்னியா பகுதியில் கின்னியா காவல்துறையின் உதவியுடன் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை கடற்படையால் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, சாலையில் பயணித்துக்கொண்டிருந்த சந்தேக நபரை கடற்படை மற்றும் பொலிஸார் பரிசோதித்தபோது, அவரிடம் சுமார் 5 கிராம் ஹெராயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேக நபர் அப்பகுதியில் வசிக்கும் 38 வயதுடையவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் மற்றும் ஹெராயின் குறித்து கின்னியாபொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.