ஹெராயினுடன் முச்சக்கர வண்டியொன்று கடற்படையால் கைது

புத்தலம் கல்லடி பகுதியில் இன்று (2020 ஜனவரி 08) கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து மேற்கொன்டுள்ள நடவடிக்கையின் போது சுமார் 3 கிராம் ஹெராயின் கண்டுபிடி‍க்கப்பட்டது.

நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும், தீவில் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யவும் இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, புத்தலம் பொலிஸாருடன் இனைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்று கண்கானித்த கடற்படையினர் முச்சக்கர வண்டியை சோதிக்க முயன்றபோது சந்தேக நபர்கள் தப்பி ஓடிவிட்டனர் மற்றும் முச்சக்கர வண்டியில் மூன்று கிராம் ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டி மற்றும் ஹெராயின் ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக புத்தலம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.