சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் (02) கடற்படையால் கைது

2020 ஜனவரி 08 ஆம் திகதி சிலாவத்துரை கடற்கரையில் கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் (02) கைது செய்யப்பட்டனர்.

கடல் மற்றும் மீன் வளங்களை பாதுகாக்க இலங்கை கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் மற்றொரு நடவடிக்கை சிலாவத்துர கடற்கரை மையமாக கொண்டு மேற்கொள்ளப்ட்டன. அங்கு சந்தேகத்திற்கிடமான படகொன்று கண்கானிக்கப்பட்டதுடன் அதை ஆய்வு செய்யப்பட்டது, மேலும் மேற்கொண்ட விசாரணையின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரியவந்தது. சந்தேக நபர்கள் சிலாவத்துர மற்றும் கல்பிட்டிய பகுதிகளில் வசிக்கும் 44 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாரு கடற்படையால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், டிங்கி படகு, வெளிப்புற எரிப்பு இயந்திரம், மீன் பொதி, 24 கடல் அட்டைகள் மற்றும் 17 கிலோ கிராம் மீன் மெலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.