விற்பனைக்குத் தயாராக இருந்த மரை இறைச்சியுடன் ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு

2020 ஜனவரி 08 ஆம் திகதி அக்கரைப்பத்து பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது விற்பனைக்குத் தயாராக இருந்த மரை இறைச்சியுடன் ஒருவரை கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து கைது செய்தனர்.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற நபர்களை கைது செய்ய கடற்படையால் மேற்கொள்ளப்படும் மற்றொரு நடவடிக்கை அக்கரைப்பத்து பகுதி மையமாக கொண்டு நடத்தப்பட்டது. அங்கு விற்பனைக்குத் தயாராக இருந்த மரை இறைச்சியுடன் ஒருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் அக்கரைப்பத்து அலிகம்பை பகுதியில் வசிக்கும் 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் மற்றும் மரை இறைச்சி குறித்து அக்கரைப்பத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்பை அழகுபடுத்தும் அத்தகைய உயிரினங்களைக் கொல்வதன் மூலம் ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்ட இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க இலங்கை கடற்படை சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.