இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு

ශஇலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவின் பயிற்சிப்பெற்ற 02 அதிகாரிகள் மற்றும் 44 கடற்படை வீரர்கள் தமது பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து இன்று (2020 ஜனவரி 09) திருகோணமலை சாம்பூரில் உள்ள மரைன் படைப்பிரிவு தலைமையகத்தில் வெளியேறினார்கள்.

இந்த பயிற்சி நிறைவு மற்றும் சின்னங்கள் அணிவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா கலந்து கொண்டார். இங்கு வருகைத் தந்த விருந்தினர்கள், வெளியேறிச் செள்ளும் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை உரையாற்றிய கடற்படை தளபதி கடற்படை மரைன் பிரிவு தனித்துவமான திறமைகளைக் கொண்ட மிக வலுவான பிரிவாக குறிப்பிட முடியும் என்றும் நிலத்தடி நீர் நடவடிக்கைகளுக்காக சிறப்பு பயிற்சியளிக்கப்பட்ட இந்த படைப்பிரிவு ஒரு தீவு தேசமான எங்கள் நாட்டில் எந்தவொரு கரையோரத்திலும் தரையிறங்கும் மற்றும் கடலில் இருந்து எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டதாகவும் இலங்கையின் கடலோரப் பகுதி மற்றும் களப்புகளில் சட்டவிரோத நடவடிக்கைகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத வர்த்தகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் மரைன் பிரிவு வெற்றிகரமாக உள்ளதாகவும் எந்தவொரு பேரழிவு சூழ்நிலையையும் அல்லது எந்த அவசரநிலையையும் சமாளிக்க இந்த சக்தியை திறம்பட பயன்படுத்த முடியும் என்று கூறினார். வண்ணமயாக இடம்பெற்ற இந்த வெளியேறல் அணிவகுப்பு கடற்படை கலாச்சார குழுவின் காட்சிகளினால் வண்ணமயமானது.மேலும் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதியிடம் மரைன் பிரிவினால் நினைவு சின்னமொன்று வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுக்காக கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி, கொடி அதிகாரி கடற்படை கொடி கட்டளை, கடற்படை மரைன் பிரிவின் இயக்குநர் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட மூத்த கடற்படை அதிகாரிகள், மூத்த மற்றும் இளைய மாலுமிகள் மற்றும் வெளியேறிச் செள்ளும் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.