கிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்களுடன் மூவர் கைது

2020 ஜனவரி 08 ஆம் திகதி தம்புத்தேகம நகரப் பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு இனைந்து மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்கள் வைத்திருந்த மூவர் (03) கைது செய்யப்பட்டனர்.

கடற்படை மற்றும் செட்டிக்குளம் பொலிஸ் சிறப்பு பணிக்குழு இணைந்து தம்புத்தேகம நகரப் பகுதியில் நடந்திய சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத கிளைபோசேட் கொண்ட 219 இரசாயன பொருட்கள் பாக்கெட்டுகளை (21.9 கிலோ கிராம்) மீட்டுள்ளனர். இந்த இரசாயன பொருட்கள் பாக்கெட்டுகளை கடையில் விற்கத் தயாராகவைத்திருந்த போது இவ்வாரு கைது செய்யப்பட்டதுடன் கடையின் உரிமையாளர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் அப்பகுதியில் வசிக்கின்ற 40, 49 மற்றும் 63 வயதான நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக அனுராதபுரம் வேளாண்மைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.