ஐஸ் (Methamphetamine) போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2020 ஜனவரி 10 ஆம் திகதி புத்தலம் பகுதியில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது ஐஸ் (Methamphetamine) போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் இலங்கை கடற்படை, நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருட்களைத் தடுப்பது குறித்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதேபோன்ற ஒரு நடவடிக்கை கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து புத்தலம் பகுதியில் மேற்கொண்டுள்ளதுடன் அங்கு ஒரு வீட்டில் இருந்து 420 கிராம் ஐஸ் (Methamphetamine) போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் வீட்டில் இருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் 29 வயதான அப்பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர், ஐஸ் (Methamphetamine) போதைப்பொருள் ஆகியவற்றை புத்தலம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையில், போதைப்பொருள் அச்சுறுத்தலை சமூகத்திலிருந்து ஒழிக்கும் முயற்சியில் கடற்படை தனது போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளும்.