டி.என்.டி மற்றும் சி4 கலந்த வெடிமருந்துகளை கண்டுபிடிக்க கடற்படை உதவி

2020 ஜனவரி 9 ஆம் தேதி கின்னியா பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறை நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது டி.என்.டி மற்றும் சி 4 கலந்த வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது.

கடற்படை மற்றும் திருகோணமலை ஊழல் தடுப்பு குழு கின்னியா பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சாலையில் பயணித்த இரண்டு சந்தேக நபர்களை கவனித்தனர். இவர்கள் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போது இவர்களிடமிருந்து டி.என்.டி மற்றும் சி 4 கலந்த வெடிமருந்துகள் 1.5 கிலோகிராம் கண்டுபிடிக்கப்பட்டதுடன் சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் 44 மற்றும் 56 வயதுடைய திருகோணமலையில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள் மற்றும் வெடிமருந்துகள் கின்னியாபொலிஸாரிம் ஒப்படைக்கப்பட்டனர்.