இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான தடகள போட்டித் தொடர்- 2019 வெற்றிகரமாக நிறைவு

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான தடகள போட்டித் தொடர்- 2019 ஜனவரி 10, 11 திகதிகளில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் வண்ணமயமான குறிப்பில் நடைபெற்றது. அனைத்து கடற்படை கட்டளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்படை விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமைகளை தடத்திலும் களத்திலும் சோதனைக்கு உட்படுத்தினர்.

மேலும், இந்த போட்டித் தொடரில் கடற்படை விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமைகளை ஒரு புதிய நிலைக்கு கொண்டு சென்றனர், இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படை கட்டளை வென்றது. போட்டியின் இரண்டாம் இடங்களை பயிற்சி கட்டளை (ஆண்கள்) மற்றும் வட மத்திய கடற்படை கட்டளை (பெண்கள்) வென்றது. இந்நிகழ்வு நிறைவு விழாவில் பிரதம அதிதயாக கடற்படை கொடி கட்டளையின் கொடி அதிகாரி ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கிழக்கு கடற்படை கட்டளையின் துணை தளபதி, மூத்த அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் கலந்து கொண்டனர்.

கடற்படை வீரர் எம்.எஸ்.எல். ஸ்ரீகாந்த போட்டியின் சிறந்த வீரருக்கான விருதையும், கடற்படை வீராங்கனி பி.ஜி.எஸ்.எம் ஹெரத் சிறந்த பெண் தடகள வீராங்கனியாகவும் தேர்வு செய்யப்பட்டார்.