ஹெராயின் கொண்ட நான்கு பேரை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து திருகோணமலை சமுத்திரகம பகுதியில் இன்று (2020 ஜனவரி 12) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 31.187 கிராம் ஹெராயின் (11 பாக்கெட்டுகள்) கண்டுபிடி‍க்கப்பட்டது.

நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும், போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யவும் இலங்கை கடற்படை பல நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. அதன்படி, பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இனைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்று கண்கானித்த கடற்படையினர் முச்சக்கர வண்டியை மேலும் பரிசோதித்தனர் அப்போது 31.187 கிராம் (11 பாக்கெட்டுகள்) ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதுடன் முச்சக்கர வண்டியில் இருந்த நான்கு சந்தேக நபர்களையும் கைது செய்யப்பட்டது.

சந்தேகநபர்கள், 21 மற்றும் 22 வயதுடைய திருகோணமலையில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர், மேலும் சந்தேக நபர்கள், முச்சக்கர வண்டி மற்றும் ஹெராயின் ஆகியவை திருகோணமலை காவல் தலைமையகத்தில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.