கடலில் பாதிக்கப்பட்ட ஆறு மீனவர்களை கடற்படையால் மீட்பு

2020 ஜனவரி 13 ஆம் திகதி கடலில் பாதிக்கப்பட்ட ஆறு மீனவர்களை (06) கடற்படையினரினால் காப்பாற்றப்பட்டது.

2020 ஜனவரி 12 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை, குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தை விட்டு மீன்பிடி நடவடிக்கைகாக கடலுக்கு புறப்பட்ட பல நாள் மீன்பிடி படகொன்று கடலில் இருந்த ஒரு பாறையில் மோதி படகில் தண்ணீர் கசிந்ததால் இவர்கள் 06 பேரும் கடலில் சிக்கிக்கொண்டனர். விபத்து பற்றிய தகவல்கள் கிடைத்த விரைவில் கடற்படை தலைமையகத்தில் வழிகாட்டுதலின் கீழ் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படை படகொன்று மீனவர்கள் மீட்பு பணிக்காக சென்றது.

அதன் படி, ஹம்பாந்தோட்டை கடல் பகுதியில் சிக்கித் தவித்த இந்த மீனவர்களை கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது. மீனவர்கள் பாதுகாப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், இலங்கை கடலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.