போதைப்பொருள் வைத்திருந்த நபர் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து நிலாவேலி, எரக்கண்டி பகுதியில் 2020 ஜனவரி 13 ஆம் திகதி மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ஹெராயின் கொண்ட ஒருவரை கைது செய்யப்பட்டது.

நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும், போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யவும் இலங்கை கடற்படை பல நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. அதன்படி, பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இனைந்து நிலாவேலி, எரக்கண்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்று கண்கானித்த கடற்படையினர் முச்சக்கர வண்டியை மேலும் பரிசோதித்தனர் அப்போது 20 கிராம் 600 மிலி கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதுடன் முச்சக்கர வண்டியில் இருந்த சந்தேக நபரையும் கைது செய்யப்பட்டது. மேலதிக விசாரணையில் சந்தேகநபர் நபர் அப்பகுதியில் போதைப்பொருள் வியாபாரி என்பதும் நிலாவேலி பகுதியில் வசிக்கும் 45 வயதுடையவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர், முச்சக்கர வண்டி மற்றும் ஹெராயின் குச்சவேலிபொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், போதைப்பொருள் அச்சுறுத்தலை சமூகத்திலிருந்து ஒழிக்கும் முயற்சியில் கடற்படை தனது போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளும்.