சுகயீனமுற்றிருந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை ஆதரவு

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுக்கையீனமுற்ற ஒரு மீவைரை கடற்படையினரினால் சிகிச்சைக்காக 2020 ஜனவரி 14 ஆம் திகதி கரைக்கு கொண்டுவரப்பட்டன.

ශஇலங்கையைச் சுற்றியுள்ள கடல் மண்டலத்தைப் பயன்படுத்தும் மீனவர்கள் மற்றும் கடல் சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் இலங்கை கடற்படை, ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தை விட்டு மீன்பிடி நடவடிக்கைகாக புறப்பட்ட சிதும் புதா 01 என்ற பல நாள் மீன்பிடிப் படகில் ஒரு மீனவருக்கு ஏற்பட்டுள்ள மாரடைப்பு காரனத்தினால் அவரை கரைக்கு கொண்டு வர உதவி வழங்கியது. மீன்வள மற்றும் நீர்வளத் துறையால் கிடைக்கப்பட்ட தகவலின்படி உடனடியாக இலங்கை கடற்படையின் துரித தாக்குதல் படகொன்று மீனவரை கரைக்கு கொண்டுவர அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அம்பலன்தோட்டை கடல் பகுதியில் வைத்து கடற்படை படகில் குழுவினர் சுகயீனமுற்றிருந்த மீனவரை மீட்டெடுத்து அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்கி பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்துள்ளனர். இவர் கொஸ்கொட பகுதியில் வசிக்கின்ற 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதன்படி, ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்ட நோயாளி மருத்துவ சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

மேலும், சர்வதேச மரபுகளுக்கு ஏற்ப கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை இலங்கை கடற்படை புரிந்துகொண்டுள்ளதோடு இலங்கையர்களுக்கு கடலில் ஏற்படும் விபத்துகளை தடுப்பதுக்கு தொடர்ந்து பதிலளித்து வருகின்றது.