கேரள கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் கடற்படையினரால் கைது

2020 ஜனவரி 14, அன்று, திக்வெல்ல பகுதியில் உள்ள சாலைத் தடுப்பில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்று நிறுத்துதி சோதனை செய்த பொது கிட்டத்தட்ட மூன்று கிராம் கேரள கஞ்சா கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது.

போதைப்பொருள் இல்லாத ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய பணியில் தீவிரமாக இலங்கை கடற்படை பங்கேற்கிறது. அதன் படி திக்வெல்ல பகுதியில் உள்ள சாலைத் தடுப்பில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்று நிறுத்தி சோதனை செய்த கடற்படையினர் கிட்டத்தட்ட மூன்று கிராம் கேரள கஞ்சா மிட்டுள்ளனர். மோட்டார் சைக்கிள், அங்கு பயணித்த இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் கேரள கஞ்சா கடற்படையால் கைது செய்யப்பட்டது. சந்தேக நபர்கள் திக்வெல்ல பகுதியில் வசிக்கும் 36 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் கேரள கஞ்சா ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக திக்வெல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.