கஞ்சா கொண்டு சென்ற இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது

2020 ஜனவரி 14 ஆம் திகதி லாகுகல பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்ற இரண்டு பேரை கடற்படை மற்றும் காவல்துறை கைது செய்துள்ளனர்.

போதைப்பொருள் இல்லாத ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய பணியில் தீவிரமாக இலங்கை கடற்படை பங்கேற்கிறது. அதன் படி 2020 ஜனவரி 14 ஆம் திகதி பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இனைந்து பொத்துவில் லாஹுகல பகுதியில் மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் போது விற்பனைக்காக கொண்டு சென்ற 2 கிலோ கிராம் கஞ்சாவுடன் இரண்டு பேரை கைது செய்யப்பட்டனர். பாதையில் சென்ற சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்று நிறுத்தி சோதனை செய்த கடற்படையினர் இந்த கேரள கஞ்சா மிட்டுள்ளனர். சந்தேக நபர்கள் சியம்பலான்டுவ பகுதியில் வசிக்கின்ற 20 மற்றும் 22 வயதானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள் மற்றும் சுமார் 2 கிலோ கிராம் கஞ்சா பொத்துவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க இலங்கை கடற்படை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.