சட்டவிரோத மீன்பிடி வலைகள் கொண்ட இரண்டு நபர்களை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2020 ஜனவரி 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது இரண்டு (02) கடைகளில் இருந்த பல தடைசெய்யப்பட்ட வலைகள் கைது செய்யப்பட்டது.

சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சேதத்தைத் தடுக்க கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு இனைந்து யாழ்ப்பாணம் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது பல தடைசெய்யப்பட்ட வலைகள் கைது செய்யப்பட்டன. இந்த தடைசெய்யப்பட்ட வலைகள் விற்பனைக்கு தயாராக இருந்த போது இரண்டு (02) கடைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு இரண்டு கடை உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள், 42 மற்றும் 53 வயதுக்குட்பட்ட அப்பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலதிக விசாரணைகளுக்காக சந்தெகநபர்கள் மற்றும் வலைகள் யாழ்ப்பாண மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.