உள்ளூர் கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் கைதுசெய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் ஹம்பாந்தோட்டை கலால் பிரிவு இனைந்து சூரியவெவ கிரிஇப்பன்ஆர பகுதியில் இன்று (2020 ஜனவரி 19,) நடந்திய சோதனையின் போது சுமார் 10 கிலோகிராம் உள்ளூர் கஞ்சாவுடன் இரண்டு பேரை கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்படை, இலங்கையை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் படி கடற்படை ஹம்பாந்தோட்டை கலால் பிரிவுடன் இணைந்து சூரியவேவ கிரிஇப்பன்ஆர பகுதியில் மற்றொரு நடவடிக்கையை மேற்கொண்டது. அங்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு சந்தேக நபர்களைய சோதனை செய்த போது சுமார் 10 கிலோ கிராம் உள்ளூர் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் மோட்டார் சைக்கிள், உள்ளூர் கஞ்சா மற்றும் சந்தெகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 21 மற்றும் 33 வயதுடைய செவனகல பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள், உள்ளூர் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் குறித்து ஹம்பாந்தோட்டை கலால் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.