கடலோர சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்க கடற்படை ஆதரவு

கடற்படையின் கடலோர தூய்மைப்படுத்தும் திட்டத்தில் பல திட்டங்கள் 2020 ஜனவரி 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளன.

தீவைச் சுற்றியுள்ள கடற்கரைகளைப் பாதுகாக்க கடற்படை பல சுற்றுச்சூழல் நட்பு திட்டங்களை மேற்கொண்டுள்ளதுடன் அதிமேதகு மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் கருத்தான 'பாதுகாப்பான சுற்றுச்சூழல்' என்ற கருத்தையும் இது மூலம் செயல்படுத்த கடற்படை எதிர்பார்க்கிறது.

அதன்படி, வடக்கு தீபகற்பத்தில் யாழ்ப்பாணம், கங்கசந்துரை கடலோரப் பகுதி தூய்மைப்படுத்தும் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டது. கூடுதலாக, தென் கடற்கரையை சுத்தம் செய்வதற்கான ஒரு திட்டத்திற்கும் கடற்படை பங்களித்துள்ளது, அதோடு இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷின நிருவனத்தில் இருந்து காலி நகரம் வரை கடலோரப் பகுதி ஒருவெல்லவிலிருந்து மெடில்ல வரையிலான கடற்கரை மற்றும் ஹம்பாந்தோட்டை நகரப் பகுதி கடற்கரை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இயற்கை காரணங்கள் மற்றும் மனித நடவடிக்கைகளால் பெரிதும் மாசுபட்ட கடற்கரைகளை கடற்படை பணியாளர்களின் அர்ப்பணிப்பு காரணமாக அழகிய கடலோர பகுதிகளாக மாற்ற முடிந்தது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தல்களில் கீழ், இலங்கையைச் சுற்றியுள்ள கடலோர பகுதியை சுத்தம் செய்கின்ற நடவடிக்கைகள் அனைத்து கடற்படை கட்டளைகளிலும் நடைபெறுகின்றதுடன் இத் திட்டம் முலம் தீவைச் சுற்றியுள்ள கடலோர பகுதிகளுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஈர்க்கப்படுகின்றது.


வடக்கு கடற்படை கட்டளையின் கடலோர சுத்தம் திட்டம்


தெற்கு கடற்படை கட்டளை கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம்