மர ஆலையில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்த கடற்படை உதவி

ராகம, ஹீந்கெந்த சாலையில் உள்ள ஒரு மர ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்டுத்த இன்று (2020 ஜனவரி 21) கடற்படையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

இன்று (2020 ஜனவரி 21) ராகம ஹீந்கெந்த சாலையில் உள்ள ஒரு மர ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தினை பற்றி இலங்கை கடற்படைக்கு தகவல் அறிவிக்கப்பட்ட பின் கடற்படை வீர்ர்களினால் இத்தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இத்தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படை தீயணைப்பு பிரிவின் கடற்படை விரர்கள், தீ அனைப்பு வாகனங்கள் மற்றும் தண்ணீர் பவுசர்கள் கழந்துகொன்து.

நாட்டில் எந்தவொரு அவசரநிலையிலும் முன்னணியில் இருக்கும் இலங்கை கடற்படை, ஏதேனும் பேரழிவு ஏற்பட்டால் பொதுமக்களுக்கு உதவ தயாராக உள்ளது.