கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் கூட்டாக இனைந்து 2020 ஜனவரி 20 ஆம் திகதி சாவக்கச்சேரி, நாவட்குளி பகுதியில் நடந்திய சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் இல்லாத ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய பணியில் தீவிரமாக பங்கேற்கும் இலங்கை கடற்படை, இன்று, பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இனைந்து, சாவக்கச்சேரி, நாவட்குளி பகுதியில் ஒரு சோதனை நடவடிக்கை நடத்தியது. அப்போது ஒரு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான நபரை விசாரித்தபோது, அந்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா கிட்டத்தட்ட 04 கிலோ 55 கிராம் கண்டுபிடிக்க முடிந்தது. குறித்த கேரள கஞ்சாவை விற்கத் தயாரானபோது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் சந்தேகநபர் யாழ்ப்பாணம் சாவகாச்சேரி பகுதியில் வசிக்கும் 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கேரள கஞ்சாவை யாழ்ப்பாணம் சாவக்கச்சேரி பொலிஸாசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.