திருகோணமலை துறைமுகத்திற்கு அருகே தடைசெய்யப்பட்ட கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட 02 நபர்கள் கடற்படையால் கைது

திருகோணமலை துறைமுகத்திற்கு அருகே தடைசெய்யப்பட்ட கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட 02 நபர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடி பொருட்கள் கடற்படையால் 2020 ஜனவரி 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டது.

2020 ஜனவரி 13 ஆம் திகதி புத்தலம், பூக்குளம் கடல் பகுதியில் கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் (03) கைது செய்யப்பட்டனர்.

மேலும் விசாரணையில் சந்தேக நபர்கள் 23 மற்றும் 48 வயதுடைய திருகோணமலை, சல்லிசாம்பல்தீவு பகுதியில் குடியிருப்பாளர்கள் என்பது தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்களது பொருட்களுடன் இலங்கை கடலோர காவல்படை மூலம் திருகோணமலை மீன்வளத்துறை உதவி இயக்குநரத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.