பேருந்தில் கேரள கஞ்சாவை கொண்டு சென்ற மூன்று பேர் கைதுசெய்ய கடற்படை ஆதரவு

2020 ஜனவரி 22 ஆம் திகதி சுமார் 176 கிலோ கிராம் கேரள கஞ்சாவை பேருந்தில் கடத்தி வந்த 03 சந்தேக நபர்களை புத்தலம், பாலவிய பகுதியில் வைத்து போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் உதவியுடன் கடற்படையால் கைது செய்யப்பட்டது.

மதுவிலக்கு இல்லாத ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் மற்றொரு நடவடிக்கை வடமேற்கு கடற்படை கட்டளை மற்றும் புத்தலம் போதைப்பொருள் தடுப்பு பணியகம் ஒருகிணைந்து புத்தலம், பாலவிய பகுதியில் மெற்கொண்டுள்ளது. அங்கு புத்தலம்-கொழும்பு சாலையில் பயணித்த சந்தேகத்திற்கிடமான பஸ் ஒன்றைத் நிருத்தி சோதித்த போது, 176 கிலோகிராம் கேரள கஞ்சா இருக்கைகளின் கீழ் ஒரு ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டுருப்பதை கண்டுபிடிக்கப்பட்டதுடன் இவ்வாரு பேருந்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா பொதி கற்பிட்டி பகுதியில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்படுவதை தெரியவந்துள்ளது. அதன்படி, பேருந்தில் இருந்த சந்தேகநபர்கள் மூன்று பேருடன் கேரள கஞ்சா பொதி கைது செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 29, 31 மற்றும் 37 வயதுடைய யாழ்ப்பாணம் மற்றும் கிலினொச்சி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுமார் 176 கிலோகிராம் கேரளா கஞ்சா, மூன்று சந்தேக நபர்கள் மற்றும் பஸ் வண்டி மேலதிக விசாரணைக்காக புத்தலம் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.