பல்கலைக்கழக மாணவர்களின் பவளப்பாறை நடவு மற்றும் பாதுகாப்பு திட்டத்திற்கு கடற்படை ஆதரவு

ருஹுன பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று 2020 ஜனவரி 18 ஆம் திகதி கடற்படையுடன் இணைந்து ஒரு பவள நடவு மற்றும் பாதுகாப்பு திட்டத்தைத் தொடங்க ஒரு அடிப்படை பயிற்சித் திட்டத்தை மேற்கொண்டது.

அதன்படி, ருஹுன பல்கலைக்கழகத்தில் 33 மாணவர்கள் இலங்கை கடற்படையுடன் இணைந்து காலி ரூமச்சல கடற்கரையை மையமாகக் கொண்டு அழிவு கின்ற பவளப்பாறைகளைப் பாதுகாப்பதற்கும், பவளப்பாறைகளை மீட்டெடுப்பதற்கும் ஒரு திட்டத்தைத் தொடங்க அடிப்படை அறிவைப் பெறுவதற்கான நோக்கத்துடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தெற்கு கடற்படை கட்டளை தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் தெற்கு கடற்படை கட்டளையின் சுழியோடி பிரிவின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளால் இந்த பயிற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில், ருஹுன பல்கலைக்கழக மாணவர்கள் கடற்படைக்கு தங்களுடைய பாராட்டுகளைத் தெரிவித்தனர்.