கடற்படை மற்றும் போலீஸ் கூட்டு நடவடிக்கையால் ஹெராயினுடன் ஒருவர் கைது

கடற்படை மற்றும் மன்னார் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு ஒருங்கிணைந்து 2020 ஜனவரி 21 ஆம் திகதி தலைமன்னார், எருக்குலம்பிட்டி பகுதியில் நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது ஹெராயின் கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய முயற்சியில் பெருமளவில் பங்களிக்கும் இலங்கை கடற்படை, கடல் வழிகள் மற்றும் நிலம் வழியாகவும் போதைப்பொருள் கடத்தலைத் தவிர்க்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தலைமன்னார், எருக்குலம்பிட்டி பகுதியில், மன்னார் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவுடன் இணைந்து கடற்படையால் இத்தகைய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது, ஒரு சந்தேகத்திற்கிடமான நபர் அவதானிக்கப்பட்டு, அவரை சோதித்த போது விற்பனைக்காக துல்லியமாக மறைத்து வைத்திருந்த 01 கிராம் மற்றும் 220 மிலி.கிராம் ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, ஹெராயினுடன் சந்தேகநபரை கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் அப்பகுதியில் போதைப்பொருள் வியாபாரி என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் 33 வயதான மன்னார் பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஹெராயினுடன் மேலதிக விசாரணைக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க இலங்கை கடற்படை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.