வெற்றிகரமான விஜயத்தின் பின் இந்திய கடற்படைக் கப்பல் “அய்ராவத்” தாயாகம் திரும்பின

2020 ஜனவரி 20 ஆம் திகதி இலங்கை வந்தடைந்துள்ள இந்திய கடற்படையின் அய்ராவத் கப்பல் இன்று (2020 ஜனவரி 22) வெற்றிகரமான தனது விஜயத்தின் பின் புறப்பட்டு சென்றுள்ளது. அங்கு இலங்கை கடற்படையினரினால் நாட்டை விட்டு புறப்பட்ட இக்கப்பலுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய பிரியாவிடையளிக்கப்பட்டன.

குறித்த கப்பல் இலங்கையில் நங்கூரமிட்டுள்ள காலத்தில் இக் கப்பலின் கடற்படை சிப்பாய்கள் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொன்டனர். அதன் படி கற்பிட்டி கடற்படை விரைவான அதிரடி படகுப் படைத் தலைமையகத்தில் நடத்திய மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணம் குறித்த பயிற்சித் திட்டத்தை மதிப்பீடு செய்த கப்பலின் குழுவினர் இந்த திட்டம் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் அறிவு பகிர்வை மேம்படுத்த உதவியது என்று கூறினார்.

இலங்கைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான நட்பையும் அறிவையும் அனுபவத்தையும் பரிமாறிக்கொள்ளவும் இந்த விஜயம் உதவியது.