13 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பிராகாசித்த கடற்படை வீரர்கள் பாராட்டப்பட்டனர்

13 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பிராகாசித்த கடற்படை வீரர்கள் பாராட்டும் விழா வொன்று 2020 ஜனவரி 20 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தலைமையில் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் சோமதிலக திசானநாயக்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

2019 டிசம்பர் 01 முதல் 10 ஆம் திகதி வரை நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள தசரத் அரங்கில் நடைபெற்ற 13 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு நாட்டிற்கு புகழை ஈட்டிக் கொடுத்த கடற்படை வீரர்கள் இங்கு கடற்படை தளபதியால் பாரபட்டப்பட்டுள்ளது. அப் போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற வீரர்களுக்கான காசலகைள் மற்றும் பரிசு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தலைமையில் வழங்கப்பட்டது.

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கடற்படை விளையாட்டு வீரர்கள் 3 தங்கப் பதக்கங்கள், 21 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 29 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர். கடற்படை தலைமை பணியாளர், ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, பணிப்பாளர் நாயகம் சேவைகள் மற்றும் கடற்படை தலைமையகத்துடன் இணைக்கப்பட்ட மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.