கேரள கஞ்சாவுடன் மூன்று பேரை (03) கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் கிழக்கு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு கூட்டாக இனைந்து 2020 ஜனவரி 22 ஆம் திகதி கின்னியா முனச்சனாய் பகுதியில் நடந்திய சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா கொண்டு சென்ற இருவருடன் அப்பகுதியில் ஒரு போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் இல்லாத ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய பணியில் தீவிரமாக இலங்கை கடற்படை பங்கேற்கிறது. அதன் படி கிழக்கு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவுடன் இனைந்து கின்னியா முனச்சனாய் பகுதியில் மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் போது மோட்டார் சைகளில் சென்ற சந்தேகத்திற்கிடமான இரண்டு நபர்களை பரிசோதித்து ஆய்வு செய்துள்ளனர் அப்போது அவர்களிடமிருந்து சுமார் 02 கிலொ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. அதன் படி குறித்த சந்தெகநபர்கள், மோட்டார் சைக்கில் மற்றும் சுமார் 02 கிலோ கிராம் கேரள கஞ்சா கைது செய்யப்பட்டதுடன் சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின்படி, அப்பகுதியில் கேரள கஞ்சா விற்கும் கடத்தல்காரரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் 22, 32 மற்றும் 36 வயதுடைய தம்பலகமுவ மற்றும் கின்னியா பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த சந்தெகநபர்கள் (02), மோட்டார் சைக்கில் மற்றும் கேரள கஞ்சா தொடர்பான மேலதிக விசாரணைகள் கின்னியா பொலிஸார் மேற்கொள்கின்றனர்.