சுமார் 1.5 கிலோ கேரள கஞ்சா கடற்படையனால் மீட்பு

2020 ஜனவரி 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கடைக்காடு கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட தேடலின் போது சுமார் 1 கிலோ மற்றும் 500 கிராம் கேரள கஞ்சாவை கடற்படை மீட்டது.

கடலிலும் கடலோரப் பகுதிகளிலும் கடற்படையின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஒரு நாட்டை போதைப்பொருள் இல்லாததாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, யாழ்ப்பாணத்தில் உள்ள கடைக்காடு கடற்கரைப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ஈரமான நிலையில் இருந்த சுமார் 1 கிலோ மற்றும் 500 கிராம் கேரள கஞ்சாவைக் மீட்டது.

கடற்படையின் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, கேரள கஞ்சாவை நாட்டிற்கு கடத்த மோசடி செய்பவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன, மேலும் கடற்படைத் நடவடிக்கைகளால் இந்த அளவு கேரள கஞ்சா கைவிடப்பட்டதாக நம்பப்படுகிறது. மீட்கப்பட்ட கேரள கஞ்சாத்தொகை மேலதிக நடவடிக்கைகளுக்காக பலை பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.