கடற்படை நான்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்கிறது

ஜனவரி 23 அன்று கடற்படை மற்றும் காவல்துறை, வெல்லம்பிட்டி பகுதியில் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டன.

அதன்படி, வெலிசார கடற்படைத் தளத்திலுள்ள கடற்படைப் வீரர்கள் மற்றும் பொலிஸ் அதிரடிப்டை இந்த ஒருங்கிணைந்த தேடல் நடவடிக்கையை வெல்லம்பிட்டியின் பொதுப் பகுதியில் நடத்தி சந்தேகத்திற்கிடமான நான்கு (04) நபர்களைக் கவனித்தனர். மேலதிக தேடலில், 04 சந்தேக நபர்களால் 01 கிலோ மற்றும் 450 கிராம் கஞ்சா கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் 18,20,22 மற்றும் 35 வயதுடைய கொலன்னாவ மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மற்றும் கேரள கஞ்சாவின் அளவு ஆகியவை மேலதிக விசாரணைக்காக வெல்லம்பிட்டி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.