பாகிஸ்தான் கடற்படை பெண்கள் சங்கத்தின் தலைவர் ஷாஹினா அப்பாஸி வெலிசர கடற்படை முன்பள்ளிக்கு வருகை

பாகிஸ்தான் கடற்படை மகளிர் அமைப்பின் தலைவரான ஷாஹீனா அப்பாஸி, வெலிசர கடற்படை முன்பள்ளி மற்றும் பகல்நேர பராமரிப்பு மையத்தை 2020 ஜனவரி 27 அன்று பார்வையிட்டார்.

பாகிஸ்தான் கடற்படை மகளிர் அமைப்பின் தலைவரான திருமதி ஷாஹீனா அப்பாசியை, இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவு தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அன்புடன் வரவேற்றனர். பாலர் குழந்தைகளின் நடனத்தால் இந்த வரவேற்பு நிகழ்வு மிகவும் தெளிவானது. வரவேற்பு விழா முடிவில் முன்பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் முன்பள்ளி ஊழியர்கள் திருமதி அப்பாஸிக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.

மேலும், திருமதி ஷாஹினா அப்பாசியின் வருகையை குறிக்கும் வகையில் ஒரு மா மரக்கன்று இந்த வளாகத்தில் நடப்பட்டது. நிகழ்வுகள் முடிந்ததும், திருமதி அப்பாஸிக்கு இலங்கை கடற்படை கப்பல் கெமுனு அதிகாரி இல்லத்தில் தேநீர் விருந்து வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.