கடற்படையால் இரண்டு கடலாமைகளை மீட்கப்பட்டது

2020 ஜனவரி 27 ஆம் திகதி யாழ்ப்பாணம், மண்டதீவு மற்றும் சிரதீவு பகுதிகளில் ரோந்து சென்றபோது மீன்பிடி படகில் வைத்திருந்த இரண்டு கடலாமைகளை இலங்கை கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன் படி கடற்படையால் யாழ்ப்பாணம், மண்டதீவு மற்றும் சிரதீவு பகுதிகளில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் பொது மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு மீன்பிடி படகுக்குள் இருந்த இரண்டு வாழும் ஆமைகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் படகில் இருந்த மூன்று நபர்கள் மற்றும் பிற மீன்பிடிபொருட்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் 36, 25 மற்றும் 20 வயதுடைய யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள் மற்றும் இரு கடலாமைகள் வேலனி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.