72 கிலோகிராம் வல்லப்பட்டா கொண்ட இரண்டு நபர்கள் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் இணைந்து, 2020 ஜனவரி 27 ஆம் திகதி 72 கிலோகிராம் வல்லப்பட்டாவுடன் இரண்டு (02) நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து கடற்படை வழக்கமான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. அதன்படி மன்னார் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுடன் இணைந்து கடற்படை 2020 ஜனவரி 27 ஆம் திகதி பல்லமாடு, சன்னார் பகுதியில்’நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு வீட்டைபரிசோதிக்கப்பட்டது. அங்கு வீட்டில் விற்பனைக்கு தயாரிக்கப்பட்ட 72 கிலோகிராம் வல்லப்பட்டா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு விட்டில் இருந்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர் சந்தேக நபர்கள் 22 மற்றும் 63 வயதுடைய சன்னார் மற்றும் புத்தலத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, கைதுசெய்யப்பட்ட 72 கிலோகிராம் வல்லப்பட்டா மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அடம்பன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.