வெற்றிகரமான விஜயத்தின் பின் பிலிப்பைன்ஸ் கடற்படைக் கப்பல்கள் தாயாகம் திரும்பின

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு வருகை தந்த பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான ரமோன் அல்கராஸ்(Ramon Alcaraz) மற்றும் டாவோ டெல்சூர் (Davao Delsur) ஆகிய இரண்டு கப்பல்கள் இன்று (2020 ஜனவரி 29) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.

அதன் படி, 2020 ஜனவரி 26 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்த பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான ரமோன் அல்கராஸ்(Ramon Alcaraz) மற்றும் டாவோ டெல்சூர் (Davao Delsur) ஆகிய இரண்டு கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிட்டுள்ள காலத்தில் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளதுடன், வெலிசர கடற்படை முகாமில் நடைபெற்ற நட்பு கூடைப்பந்து போட்டி இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பை அதிகரிக்க குறிப்பாக உதவியாக இருந்தது.

மூன்று நாள் வெற்றிகரமான உத்தியோகபூர்வ விஜயத்தைத் தொடர்ந்து, இன்று (2020 ஜனவரி 29,) நாட்டை விட்டு வெளியேறும் பிலிப்பைன்ஸ் கப்பல்களுக்கு இலங்கை கடற்படை இன்று விடைபெற்றது.