கேரள கஞ்சாவுடன் மூன்று நபர்கள் கடற்படையால் கைது

2020 ஜனவரி 28 ஆம் திகதி மன்னார் சாந்திபுரம் பகுதியில் கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் நடத்திய சோதனை நடவடிக்கையின் பொது கேரள கஞ்சா கொண்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் இலங்கை கடற்படை, நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருட்களைத் தடுப்பது குறித்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் படி இன்று மன்னார் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துடன் இணைந்து இலங்கை கடற்படை நடத்திய சோதனை நடவடிக்கையின் போது 226 கிராம் கேரள கஞ்சா கொண்ட மூன்று சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டது. குறித்த சந்தேகநபர்கள் கேரள கஞ்சாவை விற்கத் தயாரானபோது இவ்வாரு கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் 24 முதல் 30 வயதுக்குட்பட்ட மன்னார் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள் மற்றும் கேரள கஞ்சா மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.