சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது

2020 ஜனவரி 28 ஆம் திகதி முல்லிகுளம் கடல் பகுதியில் கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பல்வேறு தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, முல்லிகுளம் கடல் பகுதியில் ரோந்து செல்லும் போது சட்டவிரோத மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 05 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அங்கு கடற்படை ஒரு மீன்பிடி படகு, ஒரு மீன்பிடி வலை மற்றும் ஒரு வெளிப்புற எரிப்பு இயந்திரம் ஆகியவற்றைக் தனது காவலுக்கு எடுத்துள்ளது.கைது செய்யப்பட்ட நபர்கள் 20 முதல் 46 வயதுக்குட்பட்ட சிலவத்துர பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாரு கடற்படையால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், டிங்கி படகு, வெளிப்புற எரிப்பு இயந்திரம் மற்றும் மீன்பிடி பொருட்கள் மெலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.