புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து 18 கையெறி குண்டுகள் கடற்படை மீட்டுள்ளது

கடற்படை மற்றும் பொலிஸார் ஒருங்கிணைந்து 2020 ஜனவரி 29 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சாலையின் அருகே தரையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 18 கையெறி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் படி புதுக்குடியிருப்பு பகுதி மையமாக கொண்டு இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு படையணி மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சாலையின் அருகே தரையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 18 கையெறி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வாரு கண்டு பிடிக்கப்பட்ட கையெறி குண்டுகளின் எஸ்.எப்.ஜி 87 (SFG 87) வகையில் 16 கையெறி குண்டுகள் மற்றும் எம் 75 (M 75) வகையில் 02 கையெறி குண்டுகள் உள்ளது. போரின் போது இந்த குண்டுகள் பயங்கரவாதிகளால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

கண்டு பிடிக்கப்பட்ட பதினெட்டு (18) கைக்குண்டுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிலினோச்சி பொலிஸ் சிறப்பு பணிக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.